விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரோசல்பட்டி பகுதியில் ராஜ்குமார்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமர் கோவில் எதிரே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராஜ்குமாருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று ராஜ்குமாரின் வீட்டில் உள்ளவர்கள் வெளியூருக்கு சென்று விட்டனர்.

இதனால் வீட்டில் தனியாக இருந்த ராஜ்குமார் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜ்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.