மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் இருந்து இரும்பு லோடு ஏற்றி கொண்டு லாரி கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை பாட்ஷா என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிளீனராக அக்கீம் என்பவர் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தாபுரம் மேம்பாலம் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மேம்பால தடுப்பு சுவரில் மோதி தலைக்குப்புற விழுந்து சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் பாட்ஷாவும் அக்கீமும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.