மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் இருந்து இரும்பு லோடு ஏற்றி கொண்டு லாரி கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை பாட்ஷா என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிளீனராக அக்கீம் என்பவர் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தாபுரம் மேம்பாலம் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மேம்பால தடுப்பு சுவரில் மோதி தலைக்குப்புற விழுந்து சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் பாட்ஷாவும் அக்கீமும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சுக்குநூறாக நொறுங்கிய லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. பரபரப்பு சம்பவம்…!!
Related Posts
இன்ஸ்டாவில் பழக்கம்.. “விடுதியில் ரூம்”… பள்ளிப்பருவத்தில் இப்படியா….? மாணவனைப் போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தனியார் விடுதி உள்ளது. அங்கு இளம் ஜோடிகள் அறையெடுத்து தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை எடுத்து அவர்கள் உடனடியாக சென்றனர். அப்போது 3 ஜோடிகள் பிடிபட்டனர். அதில் ஒரு ஜோடி பள்ளியில் 11ஆம் வகுப்பு…
Read more“வாலிபருடன் பழக்கம்”…. பெற்றோரை பிரிந்து சென்ற சிறுமிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் திடீரென காணாமல் போன நிலையில் இது தொடர்பாக அவருடைய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து…
Read more