ஈரோடு மாவட்டத்தில் உள்ள வட்டகொம்பனை பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில், அந்த முதியவர் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு திடீரென ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.