சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி ராமையன் காடு பகுதியில் கங்காதர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரவீன்(22) பெருமாள் கோவில் மேட்டில் இருக்கும் உறவினரின் வெள்ளி பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரவீனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் மன உளைச்சலில் இருந்த பிரவீன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை பக்கம் பக்கத்துல மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.