தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நடுஅள்ளி கிராமத்தில் பெரியண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கார்த்திகாவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொக்லைன் எந்திர டிரைவரான வெங்கடேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திகா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் கார்த்திகாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கார்த்திகாவின் தாய் சித்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.