சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் இளம்சூரியன்(29) டாக்டராக இருக்கிறார். தற்போது இளம்சூரியன் திருச்சியில் இருக்கும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவ படிப்பு இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இதற்காக மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் விடுதியில் இளம்சூரியன் தங்கி இருந்தார். நேற்று இரவு திடீரென இளம்சூரியன் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இளம்சூரியன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.