சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை தங்கவேல் தோட்டம் ஒன்றாவது தெருவில் ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். கடந்த 8 வருடங்களுக்கு முன்பு ரகுபதி பிரியங்கா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 மற்றும் 4 வயதில் 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையான ரகுபதி தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் ரகுபதி தனது மனைவியை அடித்துள்ளார். இதனால் மன உளைச்சலையில் இருந்த பிரியங்கா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரியங்காவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.