கடலூர் மாவட்டத்தில் உள்ள பின்னலூர் கிராமத்தில் அருண் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபத்தில் சத்யா குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த அருண் தனது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.