கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பேடரப்பள்ளி பாலாஜி நகரில் ஆதித்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூர் சிப்காட்டில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று வேலை பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யா எதிர்பாராதவிதமாக கொதிக்கும் தண்ணீரில் தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஆதித்யாவை மீட்டு ஓசூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஆதித்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.