விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சோழம்பூண்டி இந்திரா நகரில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இளநீர் விற்பனை செய்து வந்துள்ளார். நேற்று காலை சந்திரன் பாப்பாங்குளம் பகுதியில் இருக்கும் தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சந்திரன் மரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சந்திரனை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.