சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் காஜி திருவிழா அப்துல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முகமதுராயன் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் முகமது தனது நண்பரான முகமது ரீஹன் என்பவருடன் ரம்ஜான் மாத தொழுகையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஆலந்தூர் மெட்ரோ நிலையம் அருகே அதிவேகமாக ஆலந்தூர் ஆசர்கானா சுரங்கப்பாதை அருகே திரும்பும் போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த கற்கள் மீது மோட்டார் சைக்கிள் ஏறியது.

இதனால் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் இருந்து இருவரும் கீழே விழுந்தனர். மேலும் மெட்ரோ ரயில் தூணில் தலை மோதியதால் முகமது ராயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த முகமது ரீஹனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.