விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மலையடிப்பட்டி காந்தி நகரில் சமுத்திரவள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் இருந்து 4 பவுன் தங்க நகை, 7 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சத்திரப்பட்டி செல்லும் அரசு பேருந்தில் ஏறி உள்ளார். இதனையடுத்து வடக்கு மலையடிபட்டியில் இறங்கியவுடன் தான் வைத்திருந்த பையை சமுத்திரப்பள்ளி திறந்து பார்த்துள்ளார்.

அப்போது நகை மற்றும் பணம் காணாமல் போனதை கண்டு சமுத்திரவள்ளி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.