விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை அன்பு நகர் அருகே இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் இறந்து கிடைப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் பனியன் கம்பெனியில் வேலை பார்க்கும் அருண்குமார் என்பது தெரியவந்தது. இவர் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். அதன் பிறகு அருண்குமார் சடலமாக மீட்கப்பட்டார். எனவே அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.