அரியலூர் மாவட்டத்தில் உள்ள சூரிய மணல் கிராமத்தில் இருக்கும் சந்திரா ஏரியில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட நபர் சூரியமணல் வடக்கு தெருவில் வசித்த கூலி தொழிலாளியான சபரிநாதன் என்பது தெரியவந்தது. இவருக்கு தேன்மொழி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். அவர் எப்படி இருந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.