கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிஞ்சுவாடி கிராமத்தில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதுடைய அஸ்வின் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் விநாயகர் கோவில் முன்பு அஜித் தெருக்கூத்து நடத்தியுள்ளார். அப்போது கோவில் வளாகத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில் எதிர்பாராதவிதமாக அஸ்வின் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினான்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அஸ்வினை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.