கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் தளவாய்புரம் பகுதியில் வசிக்கும் செல்வ சித்ரா என்பவர் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் லஞ்சம் வழங்குவதாக நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது. நேற்று லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜ் தலைமையிலான போலீசார் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் நுழைந்து அதிகாரிகளின் செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச் போன்ற பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனையில் அதிகாரிகள் செல்வ சித்ராவின் பையில் இருந்த கணக்கில் வராத 17,853 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் அதிகாரி மீது குவிந்த புகார்கள்…. கணக்கில் வராத பணம் பறிமுதல்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!
Related Posts
“உயிருக்கு போராடிய 8 வயது சிறுவன்….” கதறிய தாய்…. ஓடோடி வந்த தாத்தா…. கடைசில் நடந்த சோகம்…!!
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே புது நகரை சேர்ந்தவர் கணேசன்(85). இவர் விவசாயம் பார்த்து வந்தார். நேற்று காலை கணேசன் மாத்திரம்பட்டியில் உள்ள தரைமட்ட கிணற்றுக்கு அருகே மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். மதியம் கணேசனின் மருமகள் லட்சுமி தனது 8 வயது…
Read more“உங்களால தான் எலும்பு முறிந்தது…” தட்டி கேட்க சென்ற நரிக்குறவர்கள மீது தாக்குதல்…. முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் கைது….!!
கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யகுமார்(31). இவர் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர். சத்யகுமார் ஐயப்பன் சுவாமி மாலை பின்னும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பிரீத்தா(27). இந்த தம்பதியினருக்கு ஜஸ்வந்த் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் சத்யகுமார்…
Read more