கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் தளவாய்புரம் பகுதியில் வசிக்கும் செல்வ சித்ரா என்பவர் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் லஞ்சம் வழங்குவதாக நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது. நேற்று லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜ் தலைமையிலான போலீசார் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் நுழைந்து அதிகாரிகளின் செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச் போன்ற பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனையில் அதிகாரிகள் செல்வ சித்ராவின் பையில் இருந்த கணக்கில் வராத 17,853 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் அதிகாரி மீது குவிந்த புகார்கள்…. கணக்கில் வராத பணம் பறிமுதல்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!
Related Posts
“ராணுவத்தில் பணியாற்றும் அண்ணன்”.. தனியாக இருந்த அண்ணிக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொடர் டார்ச்சர்”… குடும்பத்தோடு சேர்ந்து கொழுந்தனை தீர்த்து கட்டிய கொடூரம்…!!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு கிணறு உள்ளது. இங்கு கடந்த 15ஆம் தேதி ஒரு ஆணின் சடலம் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில்…
Read moreபெரும் சோகம்…! அரசு பேருந்து மோதிய விபத்தில் ஆர்டிஓ துடிதுடித்து பலி…. ஓட்டுனர் படுகாயம்…. கோர விபத்து…!!
அரசு பேருந்தும் வருவாய் கோட்டாட்சியரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி அதிகாரி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஜீயபுரம் அருகே அரசு பேருந்தும் வருவாய் கோட்டாட்சியரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வருவாய் கோட்டாட்சியரின் வாகனம்…
Read more