அரியலூர் மாவட்டத்தில் உள்ள வானத்திரியான் பட்டிணம் கிராமத்தில் விவசாயியான மருதகாசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோகரன்(45), ராமலிங்கம்(42), அண்ணாமலை(40) என்ற மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மனோகரனுக்கும், அண்ணாமலைக்கும் சொத்தை பிரித்துக் கொடுத்த போது இடப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. நேற்று மனோகரனின் மனைவி பூபதிக்கும், அண்ணாமலைக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது மருதகாசி தனது மகனுக்கு ஆதரவாக இருந்துள்ளார். தகராறு ஏற்பட்ட போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் படுகாயமடைந்த பூபதி மற்றும் மருதகாசி ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மருதகாசி, அண்ணாமலை, பூபதி ஆகிய மூன்று பேர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.