கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பேருந்து நிலையத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் அளவுக்கு அதிகமாக மணல் பாரம் ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் போலீசார் லாரியை பறிமுதல் செய்து 17,500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனையடுத்து லாரி டிரைவர் அபராத தொகையை கட்டிய பிறகு போலீசார் லாரியை விடுவித்தனர்.