சென்னை மாவட்டத்தில் உள்ள ஜல்லடையான் பேட்டை கிருஷ்ணா தெருவில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் ஆவார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் 2-வது மகன் விக்னேஷ்(31) பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு மது போதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இதனால் விக்னேஷை பெற்றோர் கண்டித்தனர். இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த விக்னேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விக்னேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.