கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சரவணன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மோட்டார் சைக்கிளில் இருந்து 2 வாலிபர்கள் சரவணனிடம் 4 பெட்டிகள் சூரியகாந்தி சமையல் எண்ணெய் வேண்டும் என கூறினர். அதற்கு 6,400 ரூபாய் தர வேண்டும் என சரவணன் கூறியுள்ளார். அப்போது ஒருவர் ஜிப்பே மூலம் 6,400 ரூபாய் செலுத்தி விட்டோம் எனக்கூறியுள்ளார். ஆனால் பணம் எதுவும் வரவில்லை.

அதற்குள் ஒருவர் 4 சூரியகாந்தி எண்ணெய் பெட்டிகளையும் மோட்டார் சைக்கிளில் எடுத்து செல்ல தயாராக இருந்தார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சரவணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் 2 வாலிபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.