கரூர் மாவட்டத்தில் உள்ள அத்திப்பாளையம் புதூர் பகுதியில் விவசாயியான நாச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மர்ம விலங்கு 5-க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து கொன்று இழுத்து சென்றது. சில ஆடுகளின் கழுத்து பகுதியில் விலங்கு கடித்ததற்கான காயம் இருந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விலங்கின் கால் தடங்களை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, ஆடுகளை சிறுத்தை புலி தான் கடித்து கொன்றிருக்கும். அதிக எடை உடைய பெரிய ஆடுகளை நாய்கள் இழுத்து செல்வதற்கு வாய்ப்பு இல்லை. எனவே மர்ம விலங்கை வனத்துறையினர் உடனடியாக பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது