உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லி மாவட்ட மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒரு வீடியோவாக இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், மருத்துவமனை படுக்கையில் படுத்திருந்த இரண்டு நோயாளிகள் மீது, காவலர்கள் இருக்கும்போதே ஒரு ஆள் கையில் கம்புடன் வந்து தாக்குவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ ஷாம்லி மாவட்ட மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானதாகக் கூறப்படுகிறது.
ये तस्वीर UP के शामली में जिला अस्पताल की है। 2 मरीज बेड पर लेटे हुए हैं। वार्ड में पुलिसकर्मी मौजूद है। एक दबंग हाथ में लट्ठ लेकर आता है और दोनों मरीजों पर हमला कर देता है। दोनों पक्षों में पूर्व में भी लड़ाई हुई थी। pic.twitter.com/cx9HPG4dhN
— Sachin Gupta (@SachinGuptaUP) October 4, 2025
வீடியோவின்படி, தாக்கப்பட்டவர்களுக்கும் தாக்கியவருக்கும் முன்பு ஏதோ ஒரு மோதல் இருந்ததாகத் தெரிகிறது. இதனால் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். அப்போது, அந்த நபர் மருத்துவமனைக்குள் நுழைந்து, காவலர்கள் முன்னிலையிலேயே நோயாளிகளைத் தாக்கியுள்ளான். இந்த சம்பவம் மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
