செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கிளம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் சிறு சிறு பிரச்சனைகளை தயவுசெய்து ஊடகங்கள் பெரிதாக்காமல் பொது மக்களுக்கும்,  பயணிகளுக்கும் பீதியை உண்டாக்காமல் நிச்சயமாக இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்டர்நேஷனல் லெவலில்….  இந்தியாவிலேயே பெரிய பேருந்து நிலையம் அனைத்து வசதிகளும் கூடிய ஒரு பேருந்து நிலையம் என்பதை அருள் கூர்ந்து மனதிலே வைத்து,  இந்த பேருந்து நிலையம் மேலும் மக்களுடைய….

பயணிகள் உடைய பயன்பாட்டிற்கு  உகந்ததாக அமைவதற்கு நீங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று என்னுடைய அன்பான வேண்டுகோளை இந்த நேரத்தில் வைக்கிறேன். எந்த பிரச்சினையாக இருந்தாலும் எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள். துறை சார்ந்த செயலாளர் சமய மூர்த்தியோடு தொடர்பு கொள்ளுங்கள்….  துறை சார்ந்த உறுப்பினர் செயலாளருடன் தொடர்பு கொள்ளுங்கள்.  உங்களுக்கு தேவையான விளக்கங்களை அளிக்கிறோம். குறைகள் என்று நீங்கள் சுட்டி காட்டினால் அதை நிறைவு செய்வதற்கு தயாராக இருக்கின்றோம்.

ஏதாவது குற்றம் என்று கருதினால் எங்களிடம் கேளுங்கள்.  நாங்கள் அதற்குண்டான விளக்கத்தை அளிக்கிறோம். அனைத்துமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பொறுத்த அளவில் மட்டுமல்ல,  எந்தப் பணியாக இருந்தாலும்…  மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலே செயல்படுகின்ற இந்த அரசு வெளிப்படை தன்மையோடு இருக்கின்றது. நீங்கள் எந்த நேரத்தில்,  எதை வேண்டுமானாலும் கேளுங்கள். நீங்கள் எங்களோடு விளக்கத்தோடு கூடிய குறைகளை நீங்கள் சுட்டிக் காட்டுங்கள் என்று உங்களை நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.