ஆஸ்கர் விருது வென்ற The Elephant Whisperers ஆவணப் படத்தின் நாயகர்களான யானைகள் ரகு, அம்மு மற்றும் யானைகளை வளர்த்த பொம்மன்-பெள்ளி தம்பதியினரிடம் என்ற பிரதமர் மோடி உரையாடினார். இந்த நிலையில் எந்த உதவி தேவை என்றாலும் பிரதமர் தன்னிடம் கேட்க சொன்னார் என்று பொம்மன், பெள்ளி தம்பதியினர் கூறினர்.

முதுமலையில் ஆஸ்கர் தம்பதியினர் பொம்மன், பெள்ளியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து பெள்ளி பேட்டி அளித்தபோது “டெல்லிக்கு நாங்கள் இருவரும் வரவேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். தங்கள் பகுதிக்கு பள்ளிக்கூடமும், சாலை வசதியும் வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்” என்று அவர் கூறினார்.