தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாக வலம் வரும் நடிகர்கள் தான் விஜய், அஜித். இவர்கள் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான வாரிசு, துணிவு  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வசூலை குவித்தது. அஜித்-விஜய் இருவரும் கடைசியாக ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்தனர். இதனிடையே இயக்குனர் கங்கை அமரன் தன் மகன் வெங்கட் பிரபுவிடம் பொன்னியின் செல்வன் நாவலை அடிக்கடி படிக்க சொல்வாராம்.

மேலும் தல-தளபதியை சந்தித்தபோது கூட நீங்கள் இருவரும் இந்த கதையில் நடிக்க வேண்டும் என தன் ஆசையை கூறியதாக ஒரு பிரபல பத்திரிகையாளர் தெரிவித்து உள்ளார். ஒருவேளை வெங்கட் பிரபு பொன்னியின் செல்வனை படித்து, விஜய், அஜித் ஓகே சொல்லியிருந்தால் பொன்னியின் செல்வனில் அஜித்- விஜய் நடித்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது..