ஹரியானா ரேவாரி மாவட்டத்தில் 3 வருடங்களாக மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தையை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து உள்ளனர். தந்தையின் இந்த செயலுக்கு தாயும் உடந்தையாக இருந்து உள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் படி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து உள்ளனர். 12ம் வகுப்பு படிக்கும் பெண் தன் தேர்விற்கு செல்வதற்கு பதில் போலீஸ் நிலையம் சென்று தந்தை குறித்து புகார் அளித்தார்.

அதாவது, தந்தை 3 வருடங்களாக தன்னை பாலியல் வன்புணர்வு செய்து வருவதாகவும், யாரிடமாவது கூறினால் தனது கைகளையும் கால்களையும் வெட்டி கொன்று விடுவதாகவும் மிரட்டுகிறார். இதனிடையே என் தாயும் எல்லாம் தெரிந்து தந்தைக்கு ஆதரவளித்தார் என அப்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் புகாரின் படி, காவல்துறையினர் பெற்றோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் ஜெயிலில் அடைத்துள்ளனர்.