தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் லல்லாகுடா போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் ஷியாம் யாதவ்(38) என்பவர் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார். தினசரி பணி முடிந்த பிறகு கிரிக்கெட் மற்றும் பேட்மிண்டன் விளையாட்டில் அவர் பயிற்சி பெறுவது வழக்கம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பேட்மிண்டன் பயிற்சியின் போது திடீரென்று அவர் சரிந்து விழுந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக ஷியாமை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இருப்பினும் அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அதனால் மரணமடைந்துள்ளார் என சொல்லப்படுகிறது.