இத்தாலி பிரதமரான ஜார்ஜியா மெலோனி பதவி ஏற்ற பிறகு இந்தியாவிற்கு முதல்முறையாக இன்று வருகை புரிந்துள்ளார். இதையடுத்து ராஷ்டிரபதி பவனில் பிரதமர் மோடி, அவரை வரவேற்றார். இந்நிலையில் பிரதமர் ஜார்ஜியா மெலோனி பேசியதாவது, உலகம் முழுவதும் அனைத்து தலைவர்களாலும் அதிகம் விரும்பப்படுபவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் ஆவார்.

என் வாழ்த்துகளை பிரதமருக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார். கடந்த வருடம் இத்தாலியில் நடைபெற்ற பிரதமர் தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியான பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சியின் சார்பாக போட்டியிட்ட ஜார்ஜியா மெலோனி வெற்றி பெற்று அந்நாட்டின் முதல் பெண் பிரதமரானார் என்பது குறிப்பிடத்தக்கது.