திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கி மனுக்களை வாங்கியுள்ளார். இந்நிலையில் மாவுத்தன்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது, எங்கள் ஊரில் இருந்து கொடைரோட்டுக்கு செல்ல கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலை தற்போது காணவில்லை. அதனை கலெக்டர் கண்டுபிடித்து தர வேண்டும் என மனு கொடுப்பதற்காக வந்தோம் என தெரிவித்தனர். இதனை கேட்டதும் போலீசார் சினிமா நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சிகளில் வருவது போல உள்ளது என அதிர்ச்சி அடைந்தனர்.