தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழக அமைச்சரவையில் மாற்றம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, ஒரே ஒரு ஆடியோவால் மொத்த அரசாங்கமும் ஆடிப் போய்விட்டது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சராக இருந்தவர். அவர் பெரிய அளவில் படித்தவர்.

பொருளாதார நிபுணர். அப்படிப்பட்ட அவரே உதயநிதியும், சபரிசனும் ரூ.30000 கோடி சம்பாதித்துள்ளனர் என்று கூறியுள்ளார். இதனால்தான் அவருடைய துறையை மாற்றியுள்ளனர். மேலும் அவர் எந்த விஷயத்தை பற்றியும் வெளியில் சொல்லி விடக்கூடாது என்பதற்காக தான் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்காமல் வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார்.