கடந்த 2020 ஆம் வருடம் டைரக்டர் சுகுமார், அல்லு அர்ஜுன் கூட்டணியில் வெளியாகிய புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தை வெளியிட்டு அதன் தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து ஒரு பக்கம் சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா, மற்றொரு பக்கம் பால கிருஷ்ணா நடித்த வீரசிம்ஹா ரெட்டி போன்ற திரைப்படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து சென்ற மாதம் சங்கராந்தி பண்டிகையில் திரையில் வெளியிட்டனர். இதற்கிடையில் பிரபாஸ் நடிக்கும் படம் ஒன்றை தயாரிக்கும் வேலைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கென தற்போது ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள பதான் படத்தின் இயக்குனர் சித்தாத் ஆனந்தை வைத்து அப்படத்தை இயக்கவும், அதில் மற்றொரு நடிகராக பாலிவுட் ஹிருத்திக் ரோசனை அழைத்து வந்து நடிக்க வைக்கவும் முயற்சி செய்து வந்தனர். எனினும் சில காரணங்களால் அவை அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அண்மையில் வெளியான பதான் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சித்தார்த் ஆனந்திற்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக நேரடியாக மும்பைக்கே சென்று அவரை சந்தித்துள்ளனர் மைத்திரி மூவி மேக்கர் நிறுவன தயாரிப்பாளர்கள்.

அதோடு நடிகர் ஹிருத்திக் ரோஷனையும் சந்தித்து வந்து உள்ளனர். அதனை தொடர்ந்து மீண்டும் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பதாக ஏற்கனவே தாங்கள் திட்டமிட்டிருந்த படத்தை மீண்டும் ஆரம்பிக்க இருக்கிறார்கள் என்ற பேச்சு தொடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஹிருத்திக் ரோஷனும் நடிக்க உள்ளார் என்பதை உறுதிப்படுத்தி இருப்பதாக தெரிகிறது.