நாமக்கல் குமாரபாளையத்திலுள்ள தனியார் காலேஜில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காமெடி நடிகர் சூரி, தன் பள்ளி படிப்பு பற்றி மாணவர்கள் மத்தியில் வேடிக்கையாக உரையாற்றினார். அவர் பேசியிருப்பதாவது, உங்களை எல்லாம் வாத்தியார்கள் தான் பாஸ் செய்ய வைத்திருப்பர். ஆனால் என்னை தன் அப்பா தான் பாஸ் செய்ய வைத்தார். 6 ஆம் வகுப்பு படிக்க மதுரை நகரத்திற்கு போக வேண்டி இருந்தது. படிப்பு முடிக்கும் போது எங்க அப்பா பள்ளிக்கு வந்தார்.

குட்மார்னிங் டீச்சர், மை நேம் ஆர்.முத்து சாமி, மை பாதேர் நேம் ராமசாமி. மை சன்ஸ் நேம் ராம் மற்றும் லட்சுமணன். தே ஆர் டுவின்ஸ், ராம் கலெக்டர், லட்சுமணன் என்ஜினீயர் ஆவர். எப்படியாவது நீங்கள் தான் கொண்டுவர வேண்டும் சார். அஸ்எ பாதராக நான் உங்களுக்கு புல் கோஆப்ரேட் செய்வேன் சார். இதில் 1½ கிலோ மட்டன் இருக்கு, இதுல 1½ கிலோ சிக்கன் இருக்கு. என்னிடைம் சொல்லுங்க ஐ வில் கம்மிங். அவ்வளவுதான் 6ம் வகுப்பு பாஸ்.

இதேதான் 7-ம் வகுப்பிலும் 1½ கிலோ மட்டன், 1½ கிலோ சிக்கன் கொடுத்து பாஸ் ஆனேன். அதனை தொடர்ந்து 8ம் வகுப்பில் என்னை வழக்கம் போல எங்கப்பா பள்ளிக்கு அழைத்து சென்றார். குட் மார்னிங் டீச்சர் என்றபோது நான் நிப்பாட்டுங்க அப்பா என்றேன். அவர் என்னை சும்மா இருடா என கூறிவிட்டு சேம் டயலாக் அடித்துவிட்டு இந்த பக்கம் 1½ கிலோ சிக்கன் என சொல்லும்போதே அந்த டீச்சர் கிரவுண்ட்ல எங்களை ஓடவிட்டார். ஏன்னா அந்த டீச்சர் சுத்த சைவம் என தன் பிளேஸ்பேக் சொல்லி அரங்கை அதிரவைத்தார் சூரி.