பாகிஸ்தான் கேபிகே மாகாணத்தில் சவுத்வான் காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 போலீஸ் கமாண்டோக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். நள்ளிரவில் காவல் நிலையம் மீது 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் 3 திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கிச் சண்டை சுமார் இரண்டரை மணி நேரம் தொடர்ந்தது. பாகிஸ்தானில் வரும் 8ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.