கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கி தற்போது வரை இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பதினெட்டு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் போர் தொடங்கியதிலிருந்து 27 ஆயிரத்து 19 பாலஸ்தீனியர்கள் பலியானதாகவும் 66,139 பாலஸ்தீனியர்கள் காயமடைந்ததாகவும் பலஸ்தீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.