திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன வேப்பம்பட்டு கிராமத்தில் கட்டிட வேலை பார்க்கும் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் சசி என்பவரும் செட்டியப்பனூர் கூட்டு சாலையில் இருந்து வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சசியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.