அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லாங்குளம் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் திருமணத்தின்போது ஆனந்தியின் பெற்றோர் 11 பவுன் தங்கநகை, ஒன்றரை லட்ச ரூபாய் ரொக்கம், சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

முன்னதாக அவர்கள் 5 பவுன் நகையை திருமணத்திற்கு பிறகு தருவதாக தெரிவித்திருந்தனர். கடந்த 12-ஆம் தேதி ரவி தனது மனைவியை தாக்கி அந்த 5 பவுன் தங்க நகை வாங்கி வருமாறு கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் காயமடைந்த ஆனந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து ஆனந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ரவியை கைது செய்தனர்.