கடந்த மாதம் புளோரிடாவில் நடந்த பயங்கர கார் விபத்தில் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி அரியானா வியேரா (26) உயிரிழந்தார். ஜூலை 13 அன்று, அரியானா வியேரா கார் ஓட்டும்போது தூங்கிவிட்டதாகவும், ஆர்லாண்டோவில் உள்ள நோனா ஏரியில் ஒரு லாரி மீது மோதியதாகவும் கூறப்படுகிறது.

வியேராவின் தாயார், விவியன் ஓச்சோவா, தனது மகள் சோர்வால் அவதிப்பட்டிருந்தாகவும், இதனால் வாகனம் ஓட்டும் போது அவர் தூங்கிவிட்டதால் விபத்து ஏற்பட்டதாகவும் தற்போது கூறியுள்ளார். சம்பவ இடத்தில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என தெரிவித்துள்ளார்.