அமெரிக்காவில் 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது டொனால்ட் டிரம்ப் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்க முயற்சித்ததாக கூறப்பட்ட புகார்களை ஆய்வு செய்த நீதிபதிகள் குழு வழக்கு மேற்கொள்ள அனுமதி கொடுத்தது. இதை அடுத்து டிரம்ப் மீது நாட்டை ஏமாற்றம் முயன்றது அதிகாரிகளின் நடவடிக்கைக்கு இடையூறாக செயல்பட்டது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

தேர்தல் முடிவில் ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்யாமல் தடுக்க டொனால்ட் டிரம்ப் இத்தகைய சதி வேலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு சமீபத்தில் டொனால்ட் ட்ரம்புக்கு வாஷிங்டன் நீதிமன்றம் சமன் அனுப்பிய நிலையில், தான் 2024 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வதை தடுக்க தான் இப்படி ஒரு சதி வேலை நடக்கிறது என டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆஜரானார். அப்போது அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்கும் முயற்சிகள் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளிலிருந்து இவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் சாட்சிகள் யாருடனும் எந்த தொடர்பும் இருக்கக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் டிரம்ப் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அடுத்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.