பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு மாகாணத்தில் உள்ள லாவோக் நகரத்தில் சிஸ்னா 152 எனப்படும் சிறிய பயிற்சி விமானத்தில் பயிற்சியாளர் உதவியுடன் இந்திய மாணவர் அன்ஷூம் ராஜ்குமார் பயிற்சி மேற்கொண்டு இருந்தார். இந்நிலையில் துகுகேராவ் விமான நிலையம் நோக்கி இவர்கள் பயிற்சி மேற்கொண்ட விமானம் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டு அறையுடன் ஆன தொடர்பை இழந்து விபத்துக்குள்ளானது.

தொடர்பு துண்டிக்கப்பட்டதையடுத்து விமானத்தை தேடும் பணிகள் தொடங்கிய நிலையில் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த இந்திய மாணவர் மற்றும் பயிற்சியாளர் என இருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவர்களது உடலை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அரசு தெரிவித்துள்ளது.