மேற்குவங்க மாநிலத்தில் பிர்பும் என்ற மாவட்டத்தில்உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உணவை சாப்பிட்ட 30 மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு சோதனை செய்ததில் உணவில் பாம்பு ஒன்று கிடந்தது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளது தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் தலைமை ஆசிரியரின் வாகனத்தை அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.