இன்றைய காலகட்டத்தில் சிறியவர் பெரியவர் என்றெல்லாம் வயது வித்தியாசம் இல்லாமல் மாரடை ப்பு ஏற்பட்டு வருகிறது. மாரடைப்பால் பலரும் உயிரிழந்து வருகிறார்கள். அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகர் மாவட்டம், ஞாலகொண்டப்பள்ளியில் செயல்பட்டு வரும் அரசு கல்லூரியில் பயின்று வரும் மாணவி ப்ரதீப்தி (வயது 16).

இவர் நேற்று தனது கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டு நடனம் ஆடியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக நிலைகுலைந்து மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்ட நிர்வாகத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மாணவி ப்ரதீப்தி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது.