
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புலிய குளத்தில் இருந்து கழிவுநீர் அகற்றும் லாரி சவுரிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் புலியகுளம் விநாயகர் கோவில் அருகே சென்ற போது சாலையோரமாக நின்ற கார் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதற்கிடையே பொதுமக்களும் போலீசாரும் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் அந்த லாரியை விரட்டி சென்று ஓட்டுநரை மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பது தெரியவந்தது. அவர் மதுபோதையில் லாரியை இயக்கி விபத்தை ஏற்படுத்தி உள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
மதுபோதையில் லாரியை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர்; விபத்தில் ஒருவர் பலி: பதைப்பதைக்கும் சி.சி.டி.வி காட்சி #Lorry pic.twitter.com/J6oTVIJiVp
— Indian Express Tamil (@IeTamil) October 12, 2024