
ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தறி ஓட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கலாமணி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட சிவக்குமார் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் வயிறு வலி சரியாகவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்த சிவக்குமார் தனது வீட்டில் வைத்து விஷமருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.