
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்கூட்டரில் செட்டிகுளத்தில் இருந்து வேப்பமூடு சந்திப்பு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே அரசு பேருந்து ஸ்கூட்டரின் பின்புறம் பலமாக மோதியது.
இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த முத்துராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர் முத்துராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.