புலி எப்பொழுது மனிதர்களை வேட்டையாடும் என்று அய்யா கோவை சதாசிவம் அவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, புலிக்கு 14 அல்லது 15 வயதாகும்போது அதற்கான முக்கிய பல் எல்லாம் விழுந்து விடும். அதாவது கோரைப்பல் என்று கூறப்படும் பற்கள் விழுந்து விட்டால் அவைகளால் வேட்டையாட முடியாது.
View this post on Instagram
அதேபோன்று மற்ற விலங்குகளை துரத்த முடியாது கவ்வ முடியாது என்று தெரிவித்துள்ளார். ஆனால் மனிதர்கள் அமர்ந்திருந்தால் புலிகள் ஒரே கவ்வு கவ்வி வேட்டையாடி விடும் ஆனால் நின்றிருந்தால் அது வேட்டையாடாது. புலிகளுக்கு மனிதக்கறிகளே பிடிக்காது. அதனால் அதனை அது விரும்பி சாப்பிடுவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
