தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்கிறார். இவர் கடந்த வருடம் ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து நான்கு மாதங்களுக்கு பிறகு வாடகை தாய்முறையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இரட்டை ஆண் குழந்தை பிறந்தவுடன் சர்ச்சை எழுந்த நிலையில் அதன் பிறகு வதந்தி என்று தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் விவாகரத்து பெற்று  பிரிய போவதாக வதந்தி பரவியது. அதாவது திருமணம் முடிந்த பிறகு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு நேரமே சரியில்லையாம்.

விக்னேஷ் சிவன் அஜித்துடன் ஏகே 62 படத்தில் ஒப்பந்தமான நிலையில் பிறகு அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதேபோன்று இரு பெரிய நிறுவனங்களுடன் நடிகை நயன்தாரா படத்தில் நடிக்க கையெழுத்து போட்டுள்ளார். ஆனால் சரியான முறையில் டேட்ஸ் கொடுக்காததால் நயன்தாராவிடம் இருந்து அட்வான்ஸ் பணத்தை இரு நிறுவனங்களும் திரும்ப பெற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் விவாகரத்து பெற்று பெரிய போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிய நிலையில் அது தற்போது முற்றிலும் வதந்தி என்று தெரியவந்துள்ளது. மேலும் திருமணம் ஆகி 9 மாதத்தில் 2 முறை விவாகரத்து பெற்று பிரியப் போவதாக வதந்தி பரவியதால் நயன்தாரா மிகவும் பாவம் அவருடைய ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.