தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சோபிதா துலிபாலா. இவர் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இவர் தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர். இந்நிலையில் நடிகை சோபிதா துலிபாலா சமீபத்திய பேட்டியில் தன் வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, நான் மாடலாக பணியாற்றிய போது மும்பையில் நிறைய கம்பெனிகளின் வர்த்தக விளம்பரங்களுக்காக ஆடிஷனுக்கு சென்றுள்ளேன்.

ஆனால் யாரும் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. நான் அழகாகவும் கவர்ச்சியாகவும் இல்லை என்று ஒரு கம்பெனி முகத்திற்கு நேராகவே சொல்லிவிட்டது. எனக்கு 20 வயது இருக்கும் போது ஒரு கம்பெனியின் விளம்பரத்தில் நடிப்பதற்காக ஆடிஷன் சென்றபோது அழகிகளின் பின்னால் கூட நிற்க நீ தகுதியற்றவள் என்று கூறி நிராகரித்து விட்டார்கள். ஆனால் நான் சினிமாவில் பிரபலமானவுடன் என்னை நிராகரித்த அதே கம்பெனி அவர்களின் வர்த்தக தூதுவராக என்னை நியமித்தது. அந்த கம்பெனியின் விளம்பரத்தில் நான் ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து நடித்தேன் என்று கூறியுள்ளார்.