அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று திடீரென பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நெஞ்சு வலிஇருப்பதாகவும் ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் அறிக்கை வெளியிட்டிருக்கும் நாராயண ஹிருதாலயா மருத்துவமனை, “மேல் வயிற்றின் வலி காரணமாக அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நலமாக இருக்கிறார்” என்றுகுறிப்பிட்டிருக்கிறது.