அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று திடீரென்று பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் அறிக்கை வெளியிட்டிருக்கும் மருத்துவமனை மேல் வயிற்றின் வலி காரணமாக அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தற்போது அவர் நலமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.